புதிதாக திருமணம் ஆன இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் பெரியமணலியைச் சேர்ந்தவர் பிரபு, 29. மானத்தி செலம்பகவுணடர்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் மகள் ரம்யா, 26. இவர்கள், இருவரும் வெவ்வேறு
சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
நாமக்கல்லில் தனியார் ஜவுளிகடையில் பிரபு வேலை பார்த்து வந்தார். அப்போது ரமயாவுக்கும், பிரபுக்கும் காதல் ஏற்பட்டு, கடந்த, 50 நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டு, பேளுக்குறிச்சி அடுத்த சிங்களாந்தபுரம் அண்ணாநகரில்
தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபு வழக்கம் போல, நாமக்கல்லுக்கு வேலைக்கு சென்றுவிட்டு, இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ரம்யா வீட்டில் உள்ள பேனில் துாக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து பிரபு பேளுக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரிக்கின்றனர். திருமணம் ஆன, 50 நாட்களில் ரம்யா தற்கொலை செய்து கொண்டதால், நாமக்கல் ஆர்.டி.ஓ., மஞ்சுளா, ராசிபுரம் டி.எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோரும் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE