ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம், கோட்டை, ஹபீப் தெரு நுழைவு பகுதியில் தொடங்கி, 500 மீ., வரை, பழைய பேப்பர், ஸ்வெட்டர், பனியன் உள்ளிட்ட துணிக்கடைகள், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்தன. சாலையை ஆக்கிரமித்து அவை ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன், சாலை அமைக்கும் பணியால் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
சாலை பணி முடிந்த நிலையில், வியாபாரிகள், மீண்டும் கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் இடைப்பட்ட பகுதியில், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இரு மார்க்கத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டவுன் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களின் கோரிக்கையை ஏற்று, கடைகள் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், மறியல் கைவிடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE