ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் வடக்கே பந்திபோராவின் அராகம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உள்ளூர் போலீசாருடன் ,பாதுகாப்புப்படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் பிடிபட்டனர். பிடிபட்ட இரு பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE