வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர் : காஷ்மீரில் அரசு அலுவலகத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள், காஷ்மீர் பண்டிட் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் புட்காம் மாவட்டம், ஷேக்புரா பகுதியில் வசித்தவர் ராகுல் பட். காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த இவர், தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று இங்கு வந்த பயங்கரவாதிகள், ராகுலை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். சக ஊழியர்கள் ராகுலை மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ராகுல் பட் கொலை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மேலும் ராகுலின் மனைவிக்கு அரசு வேலை அளிப்பதாகவும் அரசு நிர்வாகம் தெரிவித்தள்ளது.![]()
|
போலீசார் வழக்குப் பதிவு செய்து, பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement