வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவில் மீண்டும் இந்திய தூதரகம் செயல்பட துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கடந்த 75 நாட்களுக்கு மேல் நீடித்து வருகிறது. போரினால் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
போரின் போது கீவ் நகரில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தின் நடவடிக்கைகளால் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் கீவ் நகரில் செயல்பட்ட இந்திய தூதரகம் தற்காலிகமாக போலந்து நாட்டின் தலைநகர் வார்சா நகரத்திற்கு மாற்றப்பட்டது.
![]()
|
இந்த சூழலில் மத்திய வெளியுறவுத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தற்காலிகமாக போலந்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள உக்ரைனுக்கான இந்திய தூதரகம், வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் கீவ் நகருக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட துவங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE