திருத்தணி:திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சிக்குட்பட்ட அகூர் கிராமத்தில், சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் ஏரிக்கரையோரம் மகளிர் சுகாதார வளாகம், 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது.
இந்த சுகாதார வளாகத்தை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், பெண்கள் அதை பயன்படுத்தவில்லை.அங்கு, இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. தவிர சுகாதார வளாகம் பயன்படுத்தாததால், சாணி விறகு தட்டும் இடமாக மாறியுள்ளது.இதனால், அகூர் கிராமத்தில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.பெயர் வெளியிடாத திருத்தணி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகங்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடக்கின்றன. முடிந்ததும், சுகாதார வளாகங்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE