ஆர்.கே.பேட்டை:ஊருக்கு வெளியே அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சானுார் மல்லாவரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1.68 கோடி ரூபாய் மதிப்பில், புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. படிக்கட்டு மற்றும் சாய்வுதளம் வசதியுடன் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளியில், 350 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
ஊருக்கு வெளியே ஏரிக்கரையை ஒட்டி கட்டப்பட்டுள்ள பள்ளிக்கு, சுற்றுச்சுவர் கட்டப்பட வில்லை.இதனால், விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரத்தில், வெளி நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், ஏரியில் இருந்து விஷ பூச்சிகளும் வந்து செல்கின்றன.பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE