திருவாலங்காடு:மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியில் வளர்க்கப்பட்ட செடிகளை, மக்களிடம் இலவசமாக வினியோகிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம், செடிகள் வளர்க்கப்படுகின்றன.இதில், 6.60 லட்சம் ரூபாய் மதிப்பில், கொட்டகை அமைத்து, தென்னை, மா, முருங்கை உள்ளிட்ட, 5,000 விதைகள் ஊராட்சி சார்பில், 30 நாட்களாக வளர்த்து, 100 நாள் திட்ட பணியாளர் மற்றும் மக்களிடம் இலவசமாக கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட உள்ளன.முப்பது நாட்கள் மேல் ஆன நிலையில், விதைகள் தற்போது செடிகளாய் முளைத்துள்ளன.
இந்த செடிகள் வினியோகம் செய்யப்படாமல் கொட்டகையிலேயே வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.அரசு பணம் லட்சக்கணக்கில் செலவு செய்து வளர்க்கப்படும் இந்த செடிகள், முறையாக பயன்படுத்த மக்களிடம் விரைவில் வினியோகிக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE