ஸ்ரீபெரும்புதுார்:கல்லுாரி மாணவர்கள் உருவாக்கிய 'இ -- டிக்கெட் மற்றும் ஐ- - டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட்' என்ற செயலியை ஸ்ரீபெரும்புதுாரில் போக்குவரத்து துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே பென்னுாரில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி மாணவர்கள் மற்றும் 'கல்ப்' இன்ஜினியரிங் இணைந்து இ --டிக்கெட்டிக் மற்றும் ஐ -- டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.இதன் வாயிலாக பயணியர் தங்கள் மொபைல்போன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து, கட்டணம் செலுத்தி பேருந்தில் பயணிக்க முடியும்.
இந்த செயலியின் துவக்க விழா கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் துவக்கி வைத்து பேசியதாவது-:சென்னை மாநகர பேருந்தில் 500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அனைத்து பேருந்துகளிலும் அமைக்க உள்ளோம்.போக்குவரத்து துறை தொழில்நுட்ப வசதிகளுடன் அடுத்த கட்டத்திற்கு நகர உள்ளது.
தொழிற்நுட்பங்களை அரசு போக்குவரத்து துறையில் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என ஆலோசித்து வருகிறோம்.இந்த கல்லுாரியில் மாணவர்கள் உருவாக்கிய இ -- டிக்கெட்டிக் மற்றும் ஐ- - டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் புராஜெக்டை அரசு போக்குவரத்து துறையில் எந்த வகையில் பயன்படுத்த முடியும் என அதிகாரிகளிடம் விவாதித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE