கனகம்மாசத்திரம்:எல்லப்பநாயுடுபேட்டை தரைப்பாலத்தின் வளைவில், தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
கனகம்மாசத்திரம் அடுத்த, எல்லப்பநாயுடுபேட்டையில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு, திருவள்ளூர், திருத்தணிக்கு செல்ல எல்லப்பநாயுடுபேட்டை கொசஸ்தலையாற்று தரைப்பாலம் வழியாகவே சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த நவம்பரில் பெய்த கன மழையால், கொசஸ்தலையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக எல்லப்பநாயுடுபேட்டை தரைப்பாலம் சேதமடைந்தது.அதை அதிகாரிகள் மணல் மூட்டைகள் கொண்டு தற்காலிகமாக சீரமைத்தனர். எனினும் தரைப்பாலத்தின் வளைவில் தடுப்பு அமைக்கவில்லை.இதனால் சாலையை ஒட்டி 8 அடியில் பள்ளம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இந்நிலையில், தரைப்பாலத்தின் வளைவில் தடுப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE