காஞ்சிபுரம்:ஆந்திராவில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, 16 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்துவதாக, காஞ்சிபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, டி.எஸ்.பி., டில்லிபாபு, ஆய்வாளர் வசந்தி ஆகியோர் காஞ்சிபுரம் கீழம்பி பகுதியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இருவரிடமும், போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர்.அவர்கள் வைத்திருந்த பையில், கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை செய்ததில், 16 கிலோ கஞ்சாவை, ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் விற்று வந்தது தெரிந்தது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ராம்குமார், 32, சென்னை பார்க் டவுன் பகுதியை சேர்ந்த பெருமாள், 54, ஆகியோரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலுார் சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE