திருப்போரூர்:ராயமங்கலம் ரேஷன் கடையில், 'சர்வர்' பிரச்னையால் பொருட்கள் வாங்க முடியாமல், நுகர்வோர் சிரமப்படுகின்றனர்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கு முன் 'ஸ்மார்ட் கார்டு' முறை அறிமுகப்படுத்தப்பட்டது.ரேஷன் கடைகளில், 'பயோமெட்ரிக்' கருவியில் ஸ்மார்ட் கார்டை வைத்து 'ஸ்கேன்' செய்து பொருட்கள் வழங்கப்படும். இந்த கருவியில், ஸ்கேன் செய்யப்படுவதோடு குடும்பத் தலைவரின் விரல் ரேகையும் பதிவு செய்யப்படும். இதில், 'சர்வர்' பிரச்னை ஏற்படும்போது, மக்களுக்கு பொருட்கள் வழங்க முடியாது.
அதன்படி, திருப்போரூர் அடுத்த ராயமங்கலம் ரேஷன் கடை சர்வரில், நேற்று முன்தினம் பிரச்னை இருந்ததால், ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் செய்ய, கைரேகை பதிவு செய்ய முடியவில்லை.
இதனால் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. பொருட்கள் வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்திருந்து, நுகர்வோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்; நேற்று இப்பிரச்னை தொடர்ந்தது.சர்வர் பிரச்னையை தீர்க்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE