திருவாலங்காடு:அரசு மாதிரி தொடக்கப் பள்ளியில் பயிலும் 149 மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் சார்பில், பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
திருவாலங்காடில், 40 ஆண்டுகளாக அரசு மாதிரி பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில், 149 மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.இந்தாண்டின் கடைசி பள்ளி வேலை நாளான நேற்று, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பிரியாணி விருந்து வைத்தனர்.கடந்த, 10 ஆண்டுகளாக நடக்கும் இந்த பிரியாணி விருந்து, கொரோனா காலத்தில் தடைபட்டது.
இந்தாண்டு மீண்டும் நடந்தது. விருந்துக்கு பின், ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு செல்லும், 45 மாணவ - மாணவியருக்கு எழுதுகோல், புத்தகம், விளையாட்டுப் பொருட்களை ஆசிரியர்கள் அன்பளிப்பாக கொடுத்து மகிழ்ந்தனர்.இதையடுத்து, ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்கள் புகைப்படம் எடுத்தனர். பள்ளி தலைமையாசிரியர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement