விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
கனகம்மாசத்திரம்: கனகம்மாசத்திரம் அடுத்த நல்லாட்டூர் காலனியைச் சேர்ந்தவர் பெருமாள், 26; கூலித்தொழிலாளி.நேற்று காலை, நல்லாட்டூரில் இருந்து கனகம்மாசத்திரத்தில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு, 'டி.வி.எஸ்., ஸ்டார்சிட்டி' இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.அப்போது, ஆற்காடு குப்பம் அடுத்த அரும்பாக்கம் அரசுபள்ளி அருகே வளைவில் வேகமாக சென்றபோது வாகனம் நிலைதடுமாறியதில், பெருமாள் கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதே இடத்திலேயே பலியானார்.கனகம்மாசத்திரம் போலீசார் சடலத்தை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கஞ்சா விற்றவர் கைது
ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பதாக, போலீசுக்கு தகவல் கிடைத்தது. வெங்கல் போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. சிறுவனிடம் இருந்து, 20 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, சிறுவனை கைது செய்தனர்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 42; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம், அங்குள்ள ஒரு வீட்டில் கட்டட வேலை செய்தார். வீட்டின் அருகே சென்ற மின்கம்பி மீது பட்டதில், மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள், ஜனப்பன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். உடலை மீட்ட பெரியபாளையம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE