பள்ளிப்பட்டு:ஏரியின் உபரி நீர் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், வாகன போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து, பொதட்டூர்பேட்டைக்கு ஏரிக்கரை மீது தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் கிழக்கில், ஏரி கலங்கல் பகுதியில் தரைப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. வாகன போக்குவரத்து வசதிக்காக, ஏரியை ஒட்டி மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், மாற்றுப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது.இந்த பகுதி, களிமண் நிலப்பரப்பு என்பதால், மழை ஓய்ந்தாலும், தேங்கி நிற்கும் தண்ணீர் விரைவில் வற்றுவதற்கு வாய்ப்பு இல்லை.இதனால், இந்த வழியாக செல்லும் பேருந்து, கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மழைநீர் வெளியேற்ற வழி ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE