ஆனைமலை:ஆனைமலை ஒன்றியத்திலுள்ள, மூன்று ஊராட்சி பகுதி விவசாயிகளுக்கு, இலவசமாக தென்னை நாற்றுகள் வழங்கப்பட உள்ளன.ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:ஆனைமலை ஒன்றியத்துக்கு, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நடப்பாண்டுக்கு, அர்த்தநாரிபாளையம், ஆத்துப்பொள்ளாச்சி மற்றும் காளியாபுரம் ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த கிராமங்களில், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியில் உள்பட அனைத்து அரசு துறைகள் சார்பிலும், திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.மேலும், சிறு, குறு விவசாய பண்ணை குடும்பங்களுக்கு, தலா, மூன்று நெட்டை தென்னை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.ஒரு ஊராட்சிக்கு தலா, 200 என, 600 குடும்பங்களுக்கு தென்னை நாற்றுகள் வழங்கப்பட உள்ளன. தென்னை நாற்றுகள் தேவைப்படுவோர், ஆனைமலை வேளாண் விரிவாக்க மையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE