மாதவரம்:வேலையிழந்த ஆத்திரத்தில், மாநகராட்சி அதிகாரியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றவர் கைதானார்.
சென்னை எழும்பூரை சேர்ந்தவர் அசோக்குமார், 53; மாதவரம் மண்டலத்தில் ஒப்பந்த துாய்மை பணியாளராக வேலை செய்தார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர், சரிவர பணி செய்யாமல் போதையில் கிடந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து, கண்காணிப்பு மேலாளர் பாஸ்கரன், 31, கண்டித்தும், அசோக்குமார் திருந்தவில்லை.
அதனால் பாஸ்கரன் தன் உயரதிகாரி யிடம் புகார் செய்ததால், இரு தினங்களுக்கு முன் அசோக்குமார் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு மது போதையில், மாதவரம் பேருந்து நிலையம் அருகே சென்ற அசோக்குமார், அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த பாஸ்கரனிடம் தகராறு செய்துள்ளார்.அப்போது, பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை பாஸ்கரன் மீது ஊற்றி, தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பாஸ்கரன், நேற்று காலை மாதவரம் போலீசில் புகார் செய்தார். இதன்படி போலீசார், நேற்று காலை அசோக்குமாரை கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement