செங்கல்பட்டு:செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளன.
செங்கல்பட்டில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. இந்நிலையத்தின் மேற்கூரை, 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது மேற்கூரை பழுதடைந்தும், தரைகள் பெயர்ந்தும் உள்ளன.இவற்றை சீரமைக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம், பயணியர் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, 'நமக்கு நாமே' திட்டம் 2021 - -22ன் கீழ், பழைய பேருந்து நிலையத்தின் மேற்கூரை பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதற்காக, தனியார் நிறுவனம் கொடுத்த ஐந்து லட்சம் ரூபாயில் பணிகள் மேற்கொள்ள, நகராட்சி நிர்வாக இயக்குனர் அனுமதி வழங்கியுள்ளார். இப்பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளதாக, நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. இந்நிலையத்தின் மேற்கூரை, 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது மேற்கூரை பழுதடைந்தும், தரைகள் பெயர்ந்தும் உள்ளன.இவற்றை சீரமைக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம், பயணியர் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, 'நமக்கு நாமே' திட்டம் 2021 - -22ன் கீழ், பழைய பேருந்து நிலையத்தின் மேற்கூரை பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதற்காக, தனியார் நிறுவனம் கொடுத்த ஐந்து லட்சம் ரூபாயில் பணிகள் மேற்கொள்ள, நகராட்சி நிர்வாக இயக்குனர் அனுமதி வழங்கியுள்ளார். இப்பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளதாக, நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement