புட்லுார்:வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன், ஆறு லட்சம் ரூபாய் திருடிச்சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
செவ்வாப்பேட்டை அடுத்த, புட்லுார் உல்லாசநகரைச் சேர்ந்தவர் ரவி மகன் ஸ்ரீதர், 32. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு ரூபினி, 30, என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.நேற்று காலை ஸ்ரீதர், வழக்கம்போல் பணிக்கு சென்றார்.
ரூபினி, குழந்தையை அழைத்துக் கொண்டு, வெள்ளவேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.மாலை 3:00 மணிக்கு வீட்டுக்கு வந்த ரூபினி, முன்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே, பீரோ உடைக்கப்பட்டிருந்தது.தகவலறிந்து ஸ்ரீதர் வந்து பார்த்தபோது, பீரோவிலிருந்த 40 சவரன் தங்க நகைகள், மற்றும் ஆறு லட்சம் ரூபாய், வெள்ளி பொருட்கள் மாயமானது தெரிய வந்தது.இதுகுறித்து ஸ்ரீதர் புகாரின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE