வால்பாறை:வால்பாறையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வால்பாறையில், ஜனவரி மாதம் முதல் மழைப்பொழிவு இல்லாததால், நீராதாரங்களில் வறட்சி ஏற்பட்டது. பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. குறிப்பாக, சோலையாறு அணையின் நீர்மட்டம் குறைந்ததால், கடந்த இரண்டு மாதங்களாக மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக வால்பாறை மலைப்பகுதியில், பரவலாக கோடை மழை பெய்கிறது. இதனால், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, தண்ணீர் வரத்தும் அதிகரித்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு, வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பெய்த கனமழையால், நேற்று, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):வால்பாறை - 36, சோலையாறு - 34, மேல்நீராறு - 47, கீழ்நீராறு - 37, பரம்பிக்குளம் - 28, காடம்பாறை - 8, மேல்ஆழியாறு - 2, துணக்கடவு - 20, பெருவாரிப்பள்ளம் - 32, வேட்டைக்காரன்புதுார் - 2 என்ற அளவில் மழை பெய்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE