கும்மிடிப்பூண்டி,:தனியார் திருமண மண்டபத்தில், கேட்டரிங் வேலைக்கு சென்ற பள்ளி மாணவர், லிப்டில் சிக்கி இறந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சீத்தல், 17; பிளஸ் 1 பள்ளி மாணவர்.கும்மிடிப்பூண்டி, பெத்திகுப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேட்டரிங் பணிக்கு சென்றார்.
மண்டபத்தின் கீழ்தளத்தில் சமையல் கூடத்தில் இருந்து, மேல்தளத்தில் உள்ள டைனிங் பகுதிக்கு உணவு வகைகளை எடுத்து செல்வதற்காக லிப்ட் வசதி உள்ளது.இரவு 8:00 மணிக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன், 23, விக்னேஷ், 21, மற்றும் பள்ளி மாணவன் சீத்தல் ஆகியோர், உணவு வகைகளை எடுத்துக்கொண்டு லிப்டில் மேலே சென்றுக்கொண்டிருந்தனர்.
மேல்தளத்தின் அருகில் செல்லும் லிப்டின் இரும்பு ரோப் திடீரென துண்டானது. இதனால் லிப்ட் கீழ் நோக்கி, வேகமாக இறங்கிறது.இதில் தடுமாற்றம் அடைந்த சீத்தல், லிப்ட்டின் இடுக்குளில் சிக்கி, பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.ஜெயராமன், விக்னேஷ், இருவரும் பலத்த காயங்களுடன், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கும்மிடிப்பூண்டி 'சிப்காட்' போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE