வால்பாறை:வால்பாறை நகரின் மத்தியில், குறுகலான இடத்தில் காந்தி சிலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து, அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் ஆக்கிரமிப்பு கடைகளும், ஆட்டோ, வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால், பஸ் ஸ்டாண்டிற்குள், பஸ்கள் உள்ள செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளும், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, காந்திசிலை வளாகத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை, அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.பாதுகாப்பு தேவைவிதிமுறைகளை மீறி ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பஸ்களில் முண்டியடித்து ஏறுகின்றனர். இதுபோன்ற சமயங்களில் மாணவிகள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.அதனால், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை, காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE