பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி, திப்பம்பட்டி பூங்கா நகர் மலையாண்டீஸ்வரர் உடனுறை சக்தி கோவிலில், பிரதோஷம் நடந்தது. சிவபெருமானுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் மலையாண்டீஸ்வரர் அருள்பாலித்தார். சுவாமிக்கு கனி வகைகள் படைக்கப்பட்டன.
ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. டி.கோட்டாம்பட்டி வரதராஜப்பெருமாள் கோவிலில், யோக நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வால்பாறைவால்பாறையிலுள்ள கோவில்களில், சித்திரை மாத மூன்றாவது பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர், நந்தி தெய்வத்துக்கு, பிரதோஷ பூஜை நடந்தது.மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை, 6:15 மணிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது.தேரில் ரிஷப வாகனத்தில், காசிவிஸ்வநாதர் தேவியருடன் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
உடுமலை
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி, காசி விஸ்வநாதர் சன்னதியில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சுவாமி திருவீதியுலா நடந்தது.சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தில்லை நகர், ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.இதே போல், திருமூர்த்திமலை பஞ்சலிங்கம், அமணலிங்கேஸ்வரர் கோவில், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர், கொழுமம் தாண்டேஸ்வரர், காசி விஸ்வநாதர், கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE