ஊட்டி;ஊட்டி நகராட்சிக்கு பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 91 லட்சம் ரூபாய் நிலுவை வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது.ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. 2021-22ம் நிதியாண்டில், 90 சதவீதம் வரி வசூலாகியுள்ளது. வசூலாகாத வரிகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு 'நோட்டீஸ்' அனுப்பி விரைவில் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறுகையில்,''நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியில், 90 சதவீதம் வசூலாகியுள்ளது. ஊட்டி பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 91 லட்சம் ரூபாய்; 'பான்புட்' பகுதியை சேர்ந்த ராஜன், 6.20 லட்சம் ரூபாய்; வெல்பேர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த சுப்ரமணி, 2.95 லட்சம் ரூபாய்; தாமஸ் சர்ச் பகுதியை சேர்ந்த செல்வராஜ், 2.14 லட்சம்; 'டேவிஸ்டேல்' பகுதியை சேர்ந்த ராஜேந்திர பாபு, 1.35 லட்சம் ரூபாய் என, 1.3 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. இதனை விரைவாக செலுத்துமாறு 'நோட்டீஸ்' அனுப்பி, வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE