திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் முருகன் -தெய்வானை திருக்கல்யாணம், கோலாகலமாக நடந்தது.திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் உற்சவ முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஒவ்வொரு வாகனத்திலும் காலை, மாலை என இரு வேளைகளில், சிறப்பு அலங்காரத்தில் தேர்வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், யாளி வாகனத்திலும், குதிரை வாகனத்திலும் வலம் வந்தார். பின், உற்சவர் முருகப்பெருமானுக்கும், தெய்வானைஅம்மனுக்கும் திருக்கல் யாண வைபவம் நடந்தது.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றுவழிபட்டனர். இன்று அதிகாலை தீர்த்தவாரியும், இரவு கொடி இறக்கத்துடன் சித்திரை பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE