உடுமலை:பிளஸ் 2 வேதியியல் தேர்வில், வினாக்கள் மிக எளிமையாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று, வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வுகள் நடந்தன.அதன்படி, உடுமலை கல்வி மாவட்டத்தில், வேதியியல் தேர்வுக்கு, 2,057 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 1,978 பேர் தேர்வு எழுதினர். 79 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்.
இதே போல, கணக்குப்பதிவியல் தேர்வு எழுத, 2,050 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில், 1,899 பேர் தேர்வு எழுதினர். 151 பேர், தேர்வில் பங்கேற்கவில்லை.அதேநேரம், தேர்வு எழுதிய மாணவர்கள், வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர்.பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:பொதுத்தேர்வுகளில் அடிக்கடி இடம்பெற்ற வினாக்களே இடம் பெற்றிருந்தன.
இந்த வினாக்களுக்கு மாணவர்கள் ஏற்கனவே, பயிற்சி பெற்றதால், எளிமையாக பதில் எழுதினர். ஒரு மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள், மாணவர்கள் புரிந்து படிக்கும் நிலையில் இருந்தது. இதனால், மொத்தம், 70 மதிப்பெண்களுக்கான வினாக்களில், அதிகப்படியானவர்கள் சென்டம் வாங்கலாம்.அதேபோல, கணக்கு பதிவியல் தேர்வில், 5 மதிப்பெண் வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.புத்தகங்களில் உள்ள உதாரண வினாக்கள், வகுப்புகளில் பயிற்சி எடுத்த வினாக்கள் அதிகம் இருந்ததால், இந்த தேர்வில், அனைவரும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE