சென்னை, : வெளிமாநில பெண்களை நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்து, பாலியல் தொழில் செய்து வந்த, ஒடிசா மாநில வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜோதி ரஞ்சன் ஜெனா, 30; கிருஷ்ணா சந்திரா ஸ்வைன், 27. இவர்கள், வெளிமாநில பெண்களை சென்னை, தி.நகர், நுங்கம்பாக்கம், அண்ணா நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், சர்வீஸ் அப்பார்ட்மென்ட்களில் தங்க வைத்துள்ளனர்.சினிமாவில் நடிக்க வைப்பதாகவும், இவர்களுக்கு ஆசை காட்டியுள்ளனர். சமூக வலைதளங்கள் வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு வலை விரித்து, வெளிமாநில பெண்களை வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.இதுபற்றி மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து, ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர்கள் இருவரையும், நேற்று முன்தினம் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இவர்கள் மீது, பாலியல் தொழில் தொடர்பாக 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE