மும்பை:'அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும்' என, 'ஒயிட் ஹாட் ஜூனியர்' என்ற நிறுவனம் உத்தரவிட்ட நிலையில், அதன் 800க்கும் அதிகமான முழு நேர ஊழியர்கள், ராஜினாமா செய்துள்ளனர்.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் செயல்படும் ஒயிட் ஹாட் ஜூனியர் நிறுவனம், இணையம் வழியாக பாடங்களை கற்பித்து வருகிறது.
இந்நிறுவனத்தை கடந்த ஆண்டு, 'பைஜூஸ்' நிறுவனம் வாங்கியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒயிட் ஹாட் ஜூனியர் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும், வீட்டிலிருந்தே வேலை செய்து வந்தனர். கொரோனா பரவல் குறைந்து, கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்ட நிலையில், இந்நிறுவனம் தன் ஊழியர்களுக்கு, மார்ச் 18ல் அனுப்பிய கடிதத்தில், 'அனைவரும், ஏப்., 18ம் தேதி முதல், அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, ௮௦௦க்கும் அதிகமான முழு நேர ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளதாக, ஒயிட் ஹாட் ஜூனியர் நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஒயிட் ஹாட் நிறுவனத்தை, பைஜூஸ் நிறுவனம் வாங்கியதால் ஏற்பட்ட அதிருப்தியில், ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE