உடுமலை:உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பராமரிப்பு இல்லாமல் காட்சிப்பொருளாக இருந்து வருகிறது.கோவை- திண்டுக்கல், பாலக்காடு- திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில், கோவையிலிருந்து மதுரைக்கும், பாலக்காட்டிலிருந்து சென்னைக்கும், திருவனந்தபுரத்திலிருந்து மதுரைக்கும், பாலக்காட்டிலிருந்து திருச்செந்துாருக்கும் எக்ஸ்பிரஸ் மற்றும் சிறப்பு ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்களில், தினமும் பழநி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார், பொள்ளாச்சி, கோவை, பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள், உடுமலை ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு பயணிகள் வசதிக்காக, அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பராமரிப்பு இல்லாமல், பல ஆண்டுகளாக வீணாக உள்ளது.
இதனால், குடிநீருக்கு பயணிகள் அவதிப்படுவதோடு, ரயில்வே ஸ்டேஷனில் விற்பனைக்காக கடைகளும் இல்லாத நிலையில், வெளியில் வந்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.அதே போல், கழிப்பிடம் இருந்தும் திறக்கப்படாமல் உள்ளதால், பயணிகள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. பயணிகள் காத்திருக்கும் நடைமேடை பகுதியில் முட்புதர்கள், செடிகள் முளைத்து, விஷஜந்துக்களால் பாதிக்கும் அபாயம் உள்ளது.எனவே, பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE