கடலுார்-கடலுார் அடுத்த நாணமேடு மாத்துார் கொழுவாரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாக வடம் பிடித்து இழுத்தனர்.கடலுார் அடுத்த நாணமேடு கிராமத்தில் மாத்துார் கொழுவாரி அம்மன் கோவில் செடல் மற்றும் தேர் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு சாமி வீதியுலா நடந்து வந்தது. 11ம் நாள் பரிவேட்டை நிகழ்ச்சியை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது.அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் செடல் போட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று இரவு 7:00 மணிக்கு தெப்ப உற்சவம், நாளை காலை மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது. டி.எஸ்.பி., கரிகால்பாரிசங்கர் தலைமையில், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE