திருப்பூர்:அவிநாசி, ராக்கியாபாளையத்தில் உள்ளஸ்ரீபொன்காளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, 11ம் தேதி, மங்களஇசை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது.கணபதி ேஹாமம், சுதர்ஸன ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம், தனபூஜை; தீர்த்தக்குட ஊர்வலம், முளைப்பாலிகை ஊர்வலம், வாஸ்து சாந்தி பூஜைகளை தொடர்ந்து, காலை, மாலை வீதம், நான்குகால யாகசாலை பூஜைகள் நடந்தன.நேற்று அதிகாலை, நான்காம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, புனித நீருடன் கலசங்கள் புறப்பாடாகின. காலை, 6:30 மணி முதல், 7:25 மணிக்குள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபொன்காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, மகா கும்பாபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவகிரி ஆதீன 75வது கூறைகுல குரு, பாலமுருகன் ஈசான சிவாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் குருத்துவ மிராஸ், முத்துசிவசுப்பிரமணிய சிவாச்சார்யார் தலைமையிலான, சிவாச்சார்யார்கள் கும்பாபிேஷக பூஜைகளை நடத்தினர். கூறைகுலத்தோர், திருப்பணிக்குழுவினர், ராக்கியாபாளையம் ஊர்பொதுமக்கள், கும்பாபிேஷக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE