அவிநாசி:''அவிநாசி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது தொடர்பாக, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.அவிநாசி அரசு மருத்துவமனையில், நேற்று சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்த பின், அவர் கூறியதாவது:பிரதான சாலையோரம் அவிநாசி அரசு மருத்துவமனை அமைந்துள்ளதால், சில மருத்துவ கட்டமைப்புகள் தேவை என மருத்துவர்கள் கேட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கி அபாயகரமான நிலையில் பலர் சிகிச்சைக்கு வருவதால், அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை வழங்கி, பின், மேல் சிகிச்சைக்கு பிற மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கும் வகையிலான, சிகிச்சை பிரிவு அமைக்க வேண்டும் எனவும், டாக்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தற்போது, மானிய நிதிக்குழுவில், 6 கோடி ரூபாய் தாய் சேய் நல மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. பழைய கட்டடங்கள் இருந்தால், அதை இடித்து புதிய கட்டடம் அமைக்க நிதி ஒதுக்கீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்ப யோசனை தெரிவித்துள்ளேன். நான்கரை ஏக்கர் பரப்பளவில் இருப்பதால், மருத்துவமனை இடம் மாற்ற திட்டம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
விபத்தில் சிக்கி அபாயகரமான நிலையில் பலர் சிகிச்சைக்கு வருவதால், அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை வழங்கி, பின், மேல் சிகிச்சைக்கு பிற மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கும் வகையிலான, சிகிச்சை பிரிவு அமைக்க வேண்டும் எனவும், டாக்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தற்போது, மானிய நிதிக்குழுவில், 6 கோடி ரூபாய் தாய் சேய் நல மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. பழைய கட்டடங்கள் இருந்தால், அதை இடித்து புதிய கட்டடம் அமைக்க நிதி ஒதுக்கீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்ப யோசனை தெரிவித்துள்ளேன். நான்கரை ஏக்கர் பரப்பளவில் இருப்பதால், மருத்துவமனை இடம் மாற்ற திட்டம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement