காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள வைரவபுரத்தில், அங்கன்வாடி கட்டடம் சேதமடைந்ததால், அங்கன்வாடி மையம் நாடக மேடை அரங்கில் செயல்பட்டு வருகிறது.
சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி வைரவபுரத்தில் அங்கன்வாடி செயல்படுகிறது. 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இங்கு ஒரு அங்கன்வாடி பணியாளரும், ஒரு உதவியாளரும் உள்ளனர். ஒட்டுக் கட்டடத்தில் அங்கன்வாடி கட்டடம் செயல்பட்டு வந்த நிலையில், கட்டடம் முற்றிலுமாக சேதமடைந்தது. இதனால் அருகில் உள்ள, நல்ல முத்து மாரியம்மன் கோயில் கலை அரங்கத்திற்கு தற்காலிகமாக மாற்றியுள்ளனர்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகியும் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டவில்லை. அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள், நாடக மேடையில் அமரவைக்கப்பட்டுள்ளனர். மின்வசதி இல்லாதநிலையில் காஸ் சிலிண்டர், அடுப்புகள் அனைத்தும் குழந்தைகள் உள்ள அறையிலேயே வைத்துள்ளனர். விரைவில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE