விழுப்புரம்-விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியில் இன்று டான்செட் நுழைவு தேர்வு நடக்கிறது.கல்லுாரி முதல்வர் செந்தில் செய்திக்குறிப்பு:தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வரும் 2022-23ம் கல்வியாண்டிற்கான முதுகலை எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., மற்றும் எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான்., கல்வியில் சேர்வதற்கான டான்செட் நுழைவு தேர்வு இன்று 14 மற்றும் நாளை 15 ஆகிய தேதிகளில் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.இத்தேர்விற்கு வரும் தேர்வர்கள் வசதிக்காக புதிய பஸ் நிலையத்தில் இருந்து கல்லுாரிக்கு அரசு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.இதில், எம்.சி.ஏ.,விற்கு இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், எம்.பி.ஏ.,விற்கு மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையும் தேர்வு நடக்கிறது. இதேபோன்று, நாளை 15ம் தேதி எம்.இ., உள்ளிட்ட படிப்புகளுக்கு காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது.இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE