மூங்கில்துறைப்பட்டு-மூங்கில்துறைப்பட்டு அடுத்த புளியாங்கோட்டையில் சாராயம் ஏலம் விட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி, எச்சரிக்கை விடுத்தனர்.புளியாங்கோட்டையில் 2 நாட்களுக்கு முன் சாராய வியாபாரிகள் ஒன்று சேர்ந்து சாராயத்தை மொத்த விற்பனைக்கு ஏலம் விட்டனர். இந்த ஏலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் சாராய வியாபாரி 33 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் விசாரணை நடத்தினர். பின், திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பழனி, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் சென்று ஊர் முக்கிஸ்தர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, சாராயம் ஏலம் விடுவது சட்டப்படி குற்றம் ஆகும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இப்பகுதியில் சாராயம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.பின், சாராயம் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து, ஊர் முக்கிஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் இனி இதுபோன்ற காரியங்களில் ஈடுபடமாட்டோம் என்று உறுதிமொழியேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE