சாத்துார் : சாத்துார் படந்தால் ரோடு நான்கு வழிச்சாலை சந்திப்பில் நடுரோட்டில் அரசு டவுன் பஸ்சை நிறுத்தி டிரைவர் டிராபிக் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
சாத்துார் - தாயில்பட்டி வழியாக சிவகாசி செல்லும் அரசு டவுன் பஸ்சை டிரைவர் செந்தில்குமார் நேற்று காலை 8:30 மணிக்கு ஓட்டிச் சென்றார். படந்தால் ரோடு நான்கு வழி சாலை சந்திப்பில் போக்குவரத்து போலீசார் டிராபிக்கை சீரமைத்து கொண்டிருந்த போது போலீசாரின் சிக்னலை கவனிக்காமல் ஏர்ஹாரன் அடித்தபடி நான்குவழிச் சாலையில் குறுக்கே பஸ்சை ஓட்டி வந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிராபிக் போலீசார் பஸ்சை நிறுத்தி டிரைவர் செந்தில்குமாரை சத்தம் போட்டனர். கோபமான டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு கீழே இறங்கி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நான்கு வழிச்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் டிரைவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement