திருப்பூர்,:வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகப்பெருமாள் கோவில் தேர்களுக்கு, நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.திருப்பூரில் உள்ள, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. கட்டுப்பாடுகள் நீங்கிய நிலையில், இந்தாண்டு தேர்த்திருவிழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்த்திருவிழா கொடியேற்றம், அடுத்த மாதம், 6ம் தேதி நடக்கிறது. விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டம், 12ம் தேதியும், வீரராகவப்பெருமாள் கோவில் தேரோட்டம், 13ம் தேதியும் நடக்கிறது. இரண்டு தேர்களையும், தயார்படுத்த வசதியாக, தேர்களுக்கு நேற்று முகூர்த்தக்கால் நட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், சிறப்பு பூஜைகள் செய்து, தேர்தல்களில் முகூர்த்தக்கால் நடப்பட்டன. செயல் அலுவலர் சரவணபவன் முன்னிலையில், சிவாச்சாரியார்கள், பட்டாச்சார்யார்கள், தேர் மிராசுகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE