பல்லடம்:புதிய நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தலை தொடர்ந்து, பல்லடம் வட்டார அ.தி.மு.க.,வில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இது குறித்து, அ.தி.மு.க.,வினர் சிலர் கூறியதாவது:நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலில் ஏற்கனவே இருந்த நிர்வாகிகளே பெரும்பாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெயரளவுக்கு மட்டுமே தேர்தல் நடந்துள்ளது. தலைமை உத்தரவின் பேரில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மறைமுக அறிவிப்பு காரணமாக, தேர்தல் வெளிப்படையாக நடைபெறவில்லை.கட்சியிலுள்ள அடிமட்ட தொண்டர் வரை, புதிதாக பொறுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன்தான் பணியாற்றி வருவர். எதிர்பார்ப்புடன் இருந்த பலருக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல், நகர உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் ஏற்பட்ட தோல்விகளால், தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர். இந்நிலையில், பெயரளவுக்கு நடந்த உட்கட்சி தேர்தலால் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE