கோவை:ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவன வல்லுநர்கள் இடையே, கற்றல் தொழில்நுட்பங்கள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வினை, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி துவக்கி வைத்தார். அறங்காவலர் ஆதித்யா, ''மாணவர்கள் கல்வி சார் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, தங்களை எதிர்கால வேலைவாய்ப்பு சவால்களுக்கு, தகுதியானவர்களாக மாற்றிக் கொள்வது மிகவும் இன்றியமையாதது,'' என குறிப்பிட்டார்.தொடர்ந்து, நாஸ்காம் நிறுவனத்தின் திறன் குழு தேசிய தலைவர் உதயசங்கர், 'மாணவர்களிடையே பல்நோக்கு தொழில்நுட்ப திறன்கள்', வராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் சிவகுமார், 'மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றும் திறன்சார் பயிற்சிகள்' பற்றியும், வராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி பிரவீன் மேனன், 'பொறியியல் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் படைப்புகள்' குறித்தும் உரையாற்றினர்.ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஜேனட், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பல்வேறு துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE