கோவை:கோவைக்கு இன்று துணை ஜனாதிபதி வருவதை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவைக்கு இன்று (14ம் தேதி) துணை ஜனாதிபதி வருவதை முன்னிட்டு மாலை, 5.00 முதல், 7.30 மணி வரை அவிநாசி ரோடு மற்றும் அதன் இணைப்பு ரோடுகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. விமானநிலையம், பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பிற வேலைகளுக்கு செல்பவர்கள் தங்கள் பயண திட்டத்தை, முன்கூட்டியே திட்டமிட்டு அல்லது மாற்று பாதையில் செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அவிநாசி ரோடு மற்றும் அதன் இணைப்பு ரோடுகளில் செல்ல அனுமதி கிடையாது.நாளை துணை ஜனாதிபதி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து, விமானநிலையம் மற்றும் காளப்பட்டி வழியாக ஊட்டி செல்வதால், காலை, 6.30 முதல், 9.00 மணி வரை அவினாசி ரோடு, காளப்பட்டி ரோடு மற்றும் அதன் இணைப்பு ரோடுகளில், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை, முன்கூட்டியே திட்டமிட்டு அல்லது மாற்று பாதையில் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில், கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அவிநாசி ரோடு மற்றும் அதன் இணைப்பு ரோடுகளில் செல்ல அனுமதி கிடையாது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE