பெ.நா.பாளையம்:
குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால், 300 இணைப்புகள் பாதித்தது.கோவை - -மேட்டுப்பாளையம் ரோடு, வெள்ளக்கிணறு பிரிவு முதல் விஸ்வநாதபுரம் வரை உயர் அழுத்த காஸ் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.இதற்காக குழி தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குழி தோண்டும் போது, அங்கு உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் விஸ்வநாதபுரம் லே அவுட், வன்னி நகர், மேட்டுப்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் வசிக்கும், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு கடந்த, 30 நாட்களாக குடிநீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது.அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் ,' குழாய் உடைப்பை சரி செய்ய பல முறை ஒப்பந்ததாரர்களிடமும், மாநகராட்சியின் நிர்வாகத்திடமும் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.தற்போது உடைப்பு ஏற்பட்டதால், லாரி தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடி தீர்வு காண வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE