அன்னூர்:கரியாம்பாளையம், சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா, எருதுகட்டு நிகழ்ச்சியில், திரளானவர்கள் பங்கேற்றனர்.கரியாம்பாளையத்தில் பழமையான சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கரியாம்பாளையம், கிருஷ்ண கவுண்டன் புதூர், பிள்ளையப்பம்பாளையம், தெலுங்குபாளையம், தொட்டியனூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட ஏழு கிராம மக்களுக்கு பொதுவான கோவிலாகும். இக்கோவிலில் கடந்த 3ம் தேதி கம்பம் நடுதல் மற்றும் கணபதி ஹோமத்துடன் திருவிழா துவங்கியது.கடந்த 10ம் தேதி பூச்சட்டி எடுத்தல், அணிக் கூடை எடுத்தல், பூங்கரகம் எடுத்தல் நடந்தது. 11ம் தேதி அம்மன் அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், அலங்கார பூஜை நடந்தது.நேற்று முன்தினம் மாலையில் எருது கட்டும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் 50க்கும் மேற்பட்ட எருதுகளை கட்டி கரகோசம் எழுப்பினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இதையடுத்து முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மறு பூஜையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதையடுத்து மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE