திருப்பூர்:திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டுமான பணியை பார்வையிட்ட சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்துக்கு 11.06 கோடி தடுப்பூசி தருவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் 45 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். காலக்கெடு வந்தும், 1.29 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். கேரளா, கொல்லத்தில் கண்டறியப்பட்ட ஒரு வித வைரஸ் காய்ச்சலுக்கு, 'தக்காளி காய்ச்சல்' என, பெயர் வைத்துள்ளனர்.
அம்மாநில சுகாதார செயலர் மற்றும் அலுவலர்களிடம் பேசினேன்; பயப்பட தேவையில்லை. இக்காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தாது என, தெரிவித்துள்ளனர்.ஒரு வைரசுக்கு பெயர் சூட்டினால், அதை கேட்கும் மக்களுக்கு பயம் வந்து விடுகிறது. அச்சம் வேண்டாம். நோய் தடுப்பு வல்லுனர்கள் கருத்து கேட்டு, அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இரு வாரங்களில், 3,000 'ஷவர்மா' கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கெட்டுப்போன, காலாவதியான இறைச்சி உணவுகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE