சென்னை:பெண்களுக்கான உயர்கல்வி உதவித் தொகையான, 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ல் துவக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள் மட்டுமே பயன்பெற முடியும்.பட்டம் மற்றும் முதுநிலை பட்டப் படிப்பிற்கு செல்லும் அனைத்து மாணவியருக்கும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவியருக்கு மட்டுமே, இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இதற்காக, ஆறு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்து, தற்போது கல்லுாரிகளில் பட்ட படிப்பில் உள்ள மாணவியரின் விபரங்களை மட்டும், உயர் கல்வித் துறை பட்டியல் எடுத்து வருகிறது.இந்த திட்டம், காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ல் துவங்க உயர் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE