தேனி : தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 10 துவங்கியது. பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, பறவை காவடி, முளைப்பாரி, அலகு குத்தி, முடிகாணிக்கை செலுத்தி நேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிபட்டு வருகின்றனர். விழாவில் முத்துப்பல்லக்கு, பூப்பல்லக்கில் மின்அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை 6:00 மணிக்கு நடந்தது.
கலெக்டர் முரளீதரன், எம்.பி., ரவீந்திரநாத், எம்.எல்.ஏ., மகாராஜன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார் மீனா, எஸ்.பி., பிரவீன்உமேஷ்டேங்க்ரே பங்கேற்றனர். அம்மன் சன்னதி முன் தேர் நிறுத்தப்பட்டது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்தனர். இன்று மாலையும் தேரோட்டம் நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE