சிவகாசி:விருதுநகர் மாவட்டம்வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் அகழாய்வில் முன்னோர் பயன்படுத்திய சுடுமண்ணால் ஆன புகை பிடிப்பான் கருவி, மணிகள் கிடைத்துள்ளன.
வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதுவரையிலும் தோண்டப்பட்ட 5 குழிகளில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு வட்ட சில்லுகள், பானை, பொம்மைகள், தக்களி, அகல் விளக்கு மற்றும் சூதுபவளம், விலங்குகளின் எலும்புகள் கிடைத்தது.
புதிதாக தோண்டப்பட்ட 6 வது குழியில் சுடுமண்ணால் ஆன புகை பிடிப்பான் கருவி கிடைத்துள்ளது. இது அலங்காரத்துடன் உள்ளது. முன்னோர்கள் பயன்படுத்திய சுடுமண்ணால் ஆன பானைகளுக்கு அடையாளமாக ஏராளமான பானை ஓடுகள் கிடைத்துள்ளன.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், '' ஆழம் அதிகரிக்க அதிகரிக்க தினமும் பொருட்கள் கிடைத்தபடி உள்ளது. 7 வது குழி தோண்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. மேலும் பல பொருட்கள் கிடைக்கலாம்,''என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE