சென்னை:கூடுதலாக பாமாயில் வழங்க கோரிய நுகர்பொருள் வாணிப கழக உத்தரவை எதிர்த்து, நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ருச்சி சோயா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனு:அரசுக்கு ஏற்கனவே, 44.19 லட்சம் பாக்கெட் பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 22.50 லட்சம் பாக்கெட்டுகள் வழங்கும்படி கேட்கிறது.ஒரு லிட்டர் பாக்கெட் 120.25 ரூபாய் விலையில் வழங்க, நாங்கள் ஒப்புக் கொண்டாலும், அதன் விலை 165 ரூபாயாக உயர்ந்துள்ளது.
போர் நடப்பதால், உக்ரைன், ரஷ்யா நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்க முடியவில்லை. மலேஷியா நாட்டில் இருந்து மட்டுமே பாமாயில் வாங்க முடியும். விலையும் 25 சதவீதம் உயர்ந்து விட்டது. கூடுதல் பாமாயில் வழங்கவில்லை என்றால், கருப்பு பட்டியலில் சேர்த்து, அரசு டெண்டரில் பங்கேற்க விடாமல் தடுத்து விடுவர்.
எனவே, கூடுதல் பாமாயில் வழங்க, நுகர்பொருள் வாணிப கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுக்கள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன், நேற்று விசாரணைக்கு வந்தன. இருதரப்பு வாதங்களுக்கு பின், வழக்கின் உத்தரவை, நீதிபதி சுவாமி நாதன் தள்ளி வைத்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement