சென்னை:கூட்டுறவு துறையில் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்த, மூன்று இணை பதிவாளர்களுக்கு, நேற்று புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.
கூட்டுறவு துறையில் கூடுதல் பதிவாளர்கள், இணை பதிவாளர்கள், துணை பதிவாளர்கள் ஆகிய பதவிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலையில், மளிகை பொருட்கள் கொள்முதலில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த பண்டக சாலையின் மேலாண் இயக்குனராக இருந்த இணை பதிவாளர் தேவிபிரியா இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு புதிய பதவி வழங்கப்படாமல் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தார்.அவரை, ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டத்தின், கன்னியாகுமரி மாவட்ட பொது மேலாளராக நியமித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் நசிமுதீன் நேற்று உத்தரவிட்டு உள்ளார்.மேலும், கட்டாய காத்திருப்பில் இருந்த இரு இணை பதிவாளர்களுக்கும் புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE