முதுகுளத்தூர்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆனைசேரி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கூரையில் உள்ள சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்தது. மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இப்பள்ளியில் கீழக்குளம், ஆனைசேரி, நீர்க்கோழியேந்தல் கிராமத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் வகுப்பறை 2016 ல் மராமத்து செய்யப்பட்டது. தேர்வு நேரம் என்பதால் நேற்று மாணவர்கள் மரத்தடியில் உட்கார்ந்து படித்தனர்.அப்போது திடீரென்று வகுப்பறை கூரை சிமென்ட் பூச்சுகள் இடிந்து விழுந்தன.
வகுப்பறையில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.இடிபாடுகளை அகற்றும்போது ஆசிரியர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கல்வித்துறை, ஊராட்சித் அதிகாரிகள் பார்வையிட்டு வகுப்பறைக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டனர்.
இப்பள்ளியில் கீழக்குளம், ஆனைசேரி, நீர்க்கோழியேந்தல் கிராமத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் வகுப்பறை 2016 ல் மராமத்து செய்யப்பட்டது. தேர்வு நேரம் என்பதால் நேற்று மாணவர்கள் மரத்தடியில் உட்கார்ந்து படித்தனர்.அப்போது திடீரென்று வகுப்பறை கூரை சிமென்ட் பூச்சுகள் இடிந்து விழுந்தன.
வகுப்பறையில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.இடிபாடுகளை அகற்றும்போது ஆசிரியர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கல்வித்துறை, ஊராட்சித் அதிகாரிகள் பார்வையிட்டு வகுப்பறைக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement