புதுச்சேரி,-புதுச்சேரி நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சி.ஐ.டி.யூ., மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.சண்டே மார்க்கெட்டில் அடிக்காசு வசூல் செய்யும் உரிமையை தனியாருக்கு டெண்டர் விட்டதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ., மற்றும் புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் நகராட்சி ஆணையர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அண்ணா சாலையில் இருந்து பேரணியாக சென்றனர்.பேரணியில் சி.ஐ.டி.யூ., நிர்வாகிகள் சீனுவாசன், பிரபுராஜ், மதிவாணன், கொளஞ்சியப்பன், சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அழகுராஜ், வடிவேல், வீரமணிகண்டன், சேவியர் உட்பட பலர் பங்கேற்றனர். பேரணி சிறிது துாரம் சென்றதும் பெரியக்கடை போலீசார் பேரிகார்டு வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்புக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ., மற்றும் வியாபாரிகள் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE